பண்டைக் காலப் பழக்க வழக்கங்களில் பல சடங்குகளாக மாறி
நிலைபெற்றுள்ளன. சடங்குகளுக்கு வேள்வி செய்தல் என்பது பண்டைக்காலத்திலிருந்தே
உள்ளது. அதற்கான சான்றுகள் பல உள்ளன.அதுபோல திருமண சடங்குகளில் வேள்வி செய்வதும்
மிகப் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது.
அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த
சுள்ளிகள் கொண்டு தீ வளர்க்கப்பட்டு திருமண வேள்வி உருவாக்கப்படும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய
மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட
தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை
தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும்
குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.
Kalyanaveedu.com
No comments:
Post a Comment