திருமணத்தில் மணமகன் தாலி
கட்டும் நேரத்தின் போது மணமக்கள் மீது அட்சதை போட்டு வாழ்த்துகிறோம்.
நெல்லில்
இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை
கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.
அட்சதை
என்றால் குத்துப் படாததும், பழுதற்றதும் என்று
பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுது படாமல்
இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும்போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள்.
(நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).
சிலர் முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே
அறுகரிசி என்றும் சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து
“ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில்போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப்பதினாறு
பேறுபெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும்
No comments:
Post a Comment