Saturday, 12 March 2016

திருமணம்



நம் முன்னோர்கள் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாக கருதினார்கள். காலம் செல்ல செல்ல இந்த கருத்து மாறி திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப் படுவதாக பேசிக்கொண்டனர்.
நடப்பு காலங்களில் திருமணங்கள் சொர்க்கம், ரொக்கம் இரண்டுக்கும் அப்பாற்பட்டு facebook, twitter, whatsapp, g-mail, hike, viber போன்ற அசுர தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக அசுர வேகத்திலேயே நிச்சயிக்கப்படுகின்றன.
எப்படி நிச்சயிக்கப்பட்டாலும் திருமணத்தின் பொதுவான நோக்கம் “இருமனங்கள் இணைவது”.


உலகில் பல இனத்தை சார்ந்தவர், பல சமூகத்தை சார்ந்தவர் பல மதங்களை சார்ந்தவர்கள் வாழ்கின்றனர். எந்த இனம் எந்த மதமாக இருந்தாலும் மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல ஏற்ற துணையோடு வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் நியதி.
திருமணத்தின் போது பல சடங்குகள் சம்பிரதாயங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு பின்பற்றபட்டு வருகின்றன. ஜாதகபொருத்தம் பார்ப்பது முதல் ஜடை பின்னுவதை வரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இன மக்களும் புது புது விளக்கங்கள் அளிக்கின்றனர்.
மொத்தத்தில் திருமணம் என்றால் இருமனம் இணைய வேண்டும். அங்கே அறுசுவை விருந்து உண்டு. ஆட்டம் பாட்டம் அமர்க்களம் உண்டு. சந்தோஷ புன்னகை பூக்க, பட்டுசேலை சரசரக்க, மல்லிகை மணக்க, சந்தணம், குங்குமம், எலுமிச்சை, வெற்றிலை, பாக்கு, பன்னீர் என்று மங்கல பொருட்கள் மத்தியில் மங்களகரமான வாத்திய இசையோடு சொந்த பந்தங்கள் சேர்ந்து குதுகலமாய் கொண்டாடும் நாள். மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் புதிய உறவை ஏற்படுத்தி கொண்டு உற்சாகமாக வலம் வருவார்கள்.  

“ மேரேஜ் என்றால் வெறும்பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா..
வாங்க வாங்க என்று சொல்லணும்…
சொல்லு சொல்லு வாயும் வலுக்கணும்…
வந்தவங்க வயிறு நெறையணும்…

வாழ்த்து சொல்லு நெஞ்சு நெறையணும்…. ”




No comments:

Post a Comment