மருதாணி நன்கு சிவப்பு நிறமாக
தோன்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதற்காக சில எளிய முறைகளை பின்பற்றினால்
போதும்.
•பாவனைக்கு ஏற்றவிதத்தில் கிடைக்கும்
மெஹந்தி தூளுடன் யூகலிப்டஸ் எண்ணெய்‚ ஏலக்காய் எண்ணெய்‚ தேசிக்காய் சாறு என்பவற்றை
சேர்த்து‚ 12 மணிநேரம் ஊறவைத்து‚ மெஹந்தி தயார் செய்யப்படுகிறது. இந்தக் கலவையை குளிர்ச்சாதனப்
பெட்டியில் வைத்தால் இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். வெளியில் வைத்தால்
இரண்டு நாட்கள் மட்டுமே வைக்க முடியும். இந்த மெஹந்திக்கலவை பழசாக பழசாக நாம் எதிர்பார்க்கும்
நிறம் சரியாகக் கிடைக்காது. அதுவும் ஒருமாதம் பிந்தினால் நிறம் அறவே கிடைக்காது.
•அதேநேரம் மெஹந்தி தூளைக் காற்று
உட்செல்லாதவாறு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பாதுகாத்து வைத்திருக்கலாம். ஒருவருக்கு
உள்ளங்கை‚ புறங்கைமுதல், மூட்டுவரையிலும் இரண்டு கைளுக்கும் நுணுக்காமான‚ அழகான‚ கலையம்சம்
பொருந்திய மெஹந்தி அலங்காரங்களைப் போட்டுவிட இரண்டு மணிநேரம் எடுக்கும்.
இப்படிப் போடப்படும்
மெஹந்தி 15 முதல் 20 நிமிடங்களில் காய்ந்துவிடும். அதனால் அவைகைகளில் இருக்கும் போதே
அன்றாட வீட்டு வேலைகளை செய்லாம். இருந்த போதிலும் கூடியவரை, கைகளை தண்ணீரில் நனைக்காமல்
இருந்தால் நல்ல பலன்கிட்டும். மெஹந்தியை நாம் கைகளில் எப்படி வைத்திருக்கிறோமோ, அதனடிப்படையில்
தான் நல்ல பலன் கிடைக்கும். அதாவது, நாம் எதிர்பார்க்கும் நல்ல கலர் கிடைக்கும். சுமார்
ஐந்து மணிநேரத்துக்குப்பின் அவை தானாகவே கழன்று விழத் தொடங்கும்.
•பின்னர் 'பட்டர்' கத்தியை எடுத்து
லேசாக சுரண்டிவிட வேண்டும். சிவந்த நல்ல கலர் வேண்டும் என்று நினைப்பவர்கள்‚ மெஹந்தியை
அகற்றிய பின்னர் குறைந்தபட்சம் 12 மணிநேரம் வரை கைகளைத் தண்ணீரில் நனைக்காமல் இருப்பது
நல்லது. மருதாணியின் நிறம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க இம்முறை உதவும். சோப்பு‚ எண்ணை
போன்றவற்றை பயன்படுத்தும் போதும் மருதாணியின் நிறம் மங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலக்காய் எண்ணெய்க்கு, மெஹந்தியை நல்ல நிறமாக்கும் சக்தி உண்டு. அதனால் ஏலக்காயை ஒரு
தாச்சியில் போட்டு‚ சூடுகாட்டி‚ ஆவிபிடிப்பதால்,அடர்த்தியான வர்ணம் கிடைக்கும். சீனி‚
எலுமிச்சை கலந்த தண்ணீரில் கையை நனைப்பதனாலும் நல்லபலன் கிடைக்கும். இப்படிசெய்வதால்
12 மணிநேரத்துக்குப்பின் நல்லபலன் கிடைக்கும். அதனால் மெஹந்தியை இரவில் போடுவதே மிகப்
பொருத்தமாகும்.
•அத்துடன் மணப்பெண்களுக்கு திருமணத்துக்கு
இரண்டு நாட்களுக்கு முன்பே மெஹந்தி போட்டால் திருமணத்தன்று கைகளும்‚ கால்களும் வசீகரமாக
இருக்கும். ஏனென்றால் 48 மணிநேரத்தின் பின்னரே மெஹந்தியின் இயற்கையான வர்ணம் கிடைக்கும்.
சாதாரண விழாக்களாயின் 2 நாட்களுக்கு முன் போடலாம். அதேநாளில் கூட போடலாம். ஆனால் நாம்
எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.
•வெப்பமான உடல்நிலையைக் கொண்டவர்களுக்கு
மெஹந்தி வெகுசீக்கிரத்தில் சிவந்துவிடும். உடலின் சூடு மற்றும் குளிர் ஆகியவற்றின்
அடிப்படையில் மெஹந்தியின் நிறத்தை வெகுசீக்கிரத்தில் பெற்றுக் கொள்ளலாம். கைகள் எப்போதும்
வியர்க்கும் தன்மை கொண்டவர்கள் விசிறி மற்றும் காற்றோட்டமான இடத்தில் இருந்து மெஹந்தி
போட்டுக் கொள்ள வேண்டும்.
•மருதாணியின் நிறம் மங்கத் தொடங்கும்போது
சில இடங்களில் அழிந்தும்‚சில இடங்களில் அடர்த்தியான நிறத்துடனும் காணப்படும். இதுபார்ப்பதற்கு
அசிங்கமாக இருக்கும். அப்போது நீங்கள் இதை அகற்றிவி்டத்தான் விரும்புவீர்கள். இவ்வாறான
நேரத்திலும் கொஸ்மெற்றிக் 'பொடிபிளீச்' மூலம் கைகளைக்கழுவி மருதாணியின் நிறத்தைமுற்றிலும்
அழித்துவிடலாம்.
No comments:
Post a Comment